இரட்டை விதையிலைத் தாவரம்
40
இரட்டை விதையிலைத் தாவரம்
பதையும் எல்லோரும் பார்த்திருப்பார்கள். விதையிலிருந்து முளைக்கும் சிறு நாற்றுக்கு ஆதாரமான உணவுப்
பொருள், மா, எண்ணெய், புரோட்டீன் ஆகிய உருவத்தில் விதையிலைகளைச் சுற்றிலும், முளைசூழ்
தசையாக ஆமணக்கில் போல விதைகளிலே சேமித்து வைக்கப்பட்டிருக்கும்; அல்லது அந்த உணவுப் பொருள் அவரை, துவரையிற்போல விதையிலைகளிலேயே அடங்கியிருக்கும், அப்போது இவ்விதையிலைகள் தடித்துப் பருப்பாகக் காணும். விதை முளைக்கும்போது முளைவேரானது ஆணிவேர் அல்லது தாய் வேராக வளர்ந்து, பூமிக்குள் நேரே கீழ்நோக்கி வளரும். அதிலிருந்து பக்க வேர்கள் கிளைக்கும். விதையிலைகள் அவரை ஆமணக்கிற் போல நிலத்துக்குமேலே வந்தாலும் வரும். அல்லது கடலை, பட்டாணியிற் போல நிலத்தினுள்ளேயே இருந்து விடலாம். விதையிலைகள் மேலே வருமானால் அவற்றிலுள்ள உணவுப் பொருளெல்லாம் செலவாகி, நாற்றுச் சற்று வளர்ந்தவுடன் அவை வெறும் பைபோலச் சுருங்கி உதிர்ந்துவிடலாம். அல்லது ஆமணக்கிற் போல அவை முதலில் முளைகும் தசையிலுள்ள
உணவுப் பொருளைக் கரைத்துச் செரிமானம் செய்து. வளரும் நாற்றுக்கு உதவிப் பிறகு மேலே வந்து சாதாரணப் பச்சையிலையாக மாறி ஒளிச் சேர்க்கைத் தொழில் செய்து, நாற்றுக்குச் சிலகாலம் உதவி வரலாம். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் முளைவேர் தாய் வேராக வளர்வ தில்லை. அது சிறிது வளர்ந்து, பிறகு குன்றிப் பட்டுப்போகும். தண்டின் அடியிலிருந்து பல வேர்கள் புதியனவாகத் தோன்றி நார்போல் வளரும்.
இரட்டை விதையிலைத் தாவரங்கள் பலவகையாக வளர்கின்றன. சில மிகச் சிறிய பூண்டுகள்; சில மிகப் பெரிய மரங்கள்; சில ஒரு பருவமே உயிர் வாழும்; சில பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும். இவ்வகுப்புத் தாவரங்களின் உள்ளமைப்பிலும் சில சிறப்பான பண்புகளைக் காணலாம்.
நீரையும் உணவையும் உடலின் பல பாகங்களுக்குக் கொண்டு செல்லும் குழாய்த்திசு முடிச்சுக்கள்