பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரணகள்ளி

42

இரத்த அழுத்தம்

தும் உண்டு (கடுகு, முள்ளங்கி). வட்டத்திற்கு மூன்றாக இருப்பது இரட்டை விதையிலைத் தாவரங்களில்

இடப்புறம்: இரட்டை விதையிலைத் தாவரத்தின் பூ அமைப்பு. உறுப்புக்கள் ஐந்தைந்தாக இருக்கின்றன.
வலப்புறம் : ஒற்றைவிதையிலைத் தாவரத்தின் பூ அமைப்பு. உறுப்புக்கள் மும்மூன்றாக இருக்கின்றன.

மிகவும் அருமையாகக் காணப்படும் (சீத்தா). வட்டத்திற்கு மூன்றாக இருப்பது ஒற்றை விதையிலைத் தாவரங்களின் சிறப்பான பண்பாகும். சில குடும்பங்களிலே பூவின் உறுப்புக்கள் முக்கியமாகக் கேசரங்களும் சூவிலைகளும் அல்லி, தாமரை, சண்பகம், ரோஜாவிற் போல ஐந்துக்கு மேற்பட்டுப் பலவாக இருக்கும். இரட்டை விதையிலைத் தாவரங்களே இக்காலத்துத் தாவரங்களில் பெரிதும் ஓங்கியிருப்பவை. இவற்றில் ஏறக்குறைய 1,78,000 இனங்கள் இருக்கின்றன.

இரணகள்ளி சதைப்பற்றான இலைகளுள்ள பல பருவச்சிறு செடி. 1-4 அடி உயரம் வளரும். தண்டைச் சுற்றிக் கணுத்தோறும் இலைக்காம்பின் அடியோடு பொருந்திய ஒரு வரம்பு உண்டு. ஒரே செடியில்

இரணகள்ளி

தண்டின் அடிப்பாகங்களில் தனியிலைகளும் மேற்பாகங்களில் கூட்டிலைகளும் இருக்கும். இலை அல்லது சிற்றிலையின் விளிம்பு வளைவுப் பற்களுள்ளது. இலையின் பக்க நரம்புகள் முடியும் நுனிகளுக்கு அருகே, விளிம்புப் பற்களின் இடுக்குக்களில் ஒட்டுக் குருத்துக்கள் தோன்றும். ஓர் இலையைப் பறித்து வைத்திருந்தால் விளிம்பைச்சுற்றிப் பல குருத்துக்கள் புறப்பட்டு, ஒவ்வொன்றும் வேர்களும் தண்டும் இலைகளும் உள்ள ஒரு சிறு செடியாக வளர்வதைக் காணலாம். இவை முன்னுக்குத் தனித்தனிச் செடியாகிவிடும். இரணகள்ளி வெப்பவலய ஆப்பிரிக்காவுக்கு உரியது என்று கருதுகின்றனர். உலகத்து அயன மண்டல முழுவதும் இதைக் காண லாம். இது கிராஸ்ஸுலேசி என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிரையோபில்லம் காலிசினம் (Bryophyllum calycinum) என்பது இதன் பெயர். பிரையோபில்லம் சாதியில் இருபது இனங்கள் உண்டு. சில இனங்கள் தோட்டங்களில் அழகுக்காக வைக்கப்படுகின்றன.

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் சங்க காலப் புலவருள் ஒருவர். பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட மலைபடுகடாம் என்னும் நூலைப் பாடியவர். இந்நூல் பத்துப்பாட்டுக்களில் ஒன்று.

இரணியன்: இவன் இரணிய கசிபு என்றும் கூறப்படுவான். இவன் தம்பி இரணியாக்கன். இவர்கள் இருவரும் காசிபருக்குந் திதிக்கும் பிறந்தவர்கள் இருவரும் வைகுந்தத்திலே திருமால் கோயிலின் வாயிற்காவலரா யிருந்ததாகவும், சனகர் முதலான நால்வரின் சாபத்தாலே அசுரர்களாகப் பிறந்தார்கள் எனவும் கூறுவர். இரணியாக்கனைக் கொன்ற திருமாலிடம் தீராப் பெரும்பகைகொண்ட இரணியன் எங்குந் திருமால் வழிபாடே செய்யலாகாதெனத் தடுத்தான். இவன் மகனான பிரகலதனோ தந்தையின் கருத்துக்கு மாறாகத் திருமாலையே வழிபட்டான். மகனைப் பலவாறு துன்புறுத்திய இரணியனைத் திருமால் நரசிங்கவுருவத்துடன் வந்து கொன்றார். இரணியன் பெருவீரன். இவன் ஆட்சியிலே இவனையே மூவுலகத்தவரும் வணங்கினர் (பாகவதம், நரசிங்க புராணம்).

இரணியாக்கன் இரணியன் தம்பி. இவன் நிலவுலகைப் பாய்போற் சுருட்டிக் கொண்டுபோய்க் கடலிற் சேர்த்தான் என்றும், அதனால் திருமால் பன்றியுருவுடன் சென்று, அவனைக் கொன்று, அவ்வுலகைப் பழைய நிலையிலே கொண்டுவந்து சேர்த்தார் என்றும் கூறுவர் (நரசிங்க புராணம்).

இரத்த அழுத்தம் (Blood-Pressure): இதயம் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டும் விரிந்துகொண்டுமிருக்கிறது. சுருங்கும்போது அதிலுள்ள அறைகளிலிருந்து இரத்தம் உடம்பில் தமனி வழியாகப் பாய்ந்து செல்லுகிறது. அப்படிச் சுருங்குவதை நாடித்துடிப்பினால் அறியலாம். சுருங்கி முடிந்ததும் விரிகிறது, அப்போது இதயம் ஓய்வுகொள்கிறதாகக் கூறலாம். இவ்வாறு மாறிமாறி இயங்கி வருகிறது. இதயம் சுருங்கி இரத்தத்தை உடம்பில் பாயுமாறு செய்வதற்காக அது மேற்கொள்ளும் அழுத்த வேலையை இரத்த அழுத்தம் என்பர். இரத்த அழுத்தம் உடம்பிலுள்ள இரத்தத்தின் அளவு: தமனிகளின் மீள்சக்தி, இதயம் சுருங்குவதின் வேகம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். இதயம் சுருங்கும்போது அழுத்தம் மிகுந்தும், விரியும்போது குறைந்துமிருக்கும், மிகுந்ததைச் சுருக்கவழுத்தம்' (Systolic P) என்றும், குறைந்ததை 'விரிவழுத் தம்' (Diastolic P.) என்றும் கூறுவர்.

1783-ல் டாக்டர் ஸ்டீபன் ஹேல்ஸ் என்பவர் முதன் முதலாகக் குதிரையின் இரத்த அழுத்தத்தை அளந்-