பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகம்‌

419

காகிதம்

ஒரு தடவை வந்தால்‌ மறுபடி கொஞ்ச நாளைக்கு வருவதில்லை. மற்றும்‌ சிலருக்கு வலிப்பு அடிக்கடி ஒரு நாளிலேயே பலமூறை காணப்படலாம்‌. பெரும்பாலோருக்கு, 20 நாளைக்கு, 30 நாளைக்கு, 40 நாளைக்கு ஒருமுறையாக ஒரு குறிப்பிட்ட கால அளவில்‌ தோன்றலாம்‌. ஒரு முறை வலி வந்து நின்றவுடன்‌, சிலர்‌ புத்தி மாறித்‌ தம்மை அறியாமல்‌ வெகுதூரம்‌ சென்று விடலாம்‌. தாம்‌ இன்னவர்‌ என்று சிறிது நாட்களுக்கு அறிந்து கொள்ளாமலேயும்‌ இருக்கலாம்‌. மறுபடி திடீரென்று பழைய நினைவு வந்தவுடன்‌ இடையில்‌ நடந்தவை இன்னவென்று புலப்படாமலும்‌ இருக்கலாம்‌. சில சமயங்களில்‌ பைத்தியமும்‌ பிடித்து விடலாம்‌. இந்த நோயில்‌ ஏதோ ஒரு காரணத்தினால்‌ தசைகளுக்‌குச்‌ செல்லும்‌ நரம்புகளில்‌ அமைதி இல்லாததால்‌ உடம்பில்‌ வலிப்புக்‌ காண்கிறது. ஆகவே மூளைக்கு அமைதி கொடுக்கக்‌ கூடிய மருந்துகளை உபயோகித்‌துக்‌ குணம்‌ காணலாம்‌. இந்த மருந்துகளை எந்தச்‌ சமயங்களில்‌ வலிப்பு வரக்கூடுமோ, அந்தச்‌ சமயங்‌களில்‌ சற்று மிகுதியாகவும்‌, மற்றச்‌ சமயங்களில்‌ சற்றுக் குறைத்தும்‌ உட்கொண்டு வருவது நலம்‌. மேற்சொன்ன பெருங்காக்கைவலி, சிறுகாக்கைவலி என்னும்‌ இரண்டு விதமான வலிப்புக்களன்‌றிப்‌ பகுதிக்‌ காக்கைவலி என்னும்‌ மூன்றாவது வகையும்‌ ஒன்றுண்டு. இந்த வலிப்புச்‌ சிலர்க்கு உடம்பில்‌ ஏதாவது ஒரு பாகத்தில்‌ மட்டும்‌ காணப்படும்‌. ௮ம்மாதிரி காணப்படும்பொழுது, உணர்ச்சி போவதில்லை. சாதாரணமாக மூளையில்‌ கட்டி, காயம்‌, அழற்சி ஏற்படுவதால்‌ இம்மாதிரியாகக்‌ காணப்படுகிறது. இதை மூளையை ரண சிகிச்சை செய்து சரிப்படுத்தவேண்‌டும்‌. ரெ.சு.

காகம்‌ : பார்க்க: காக்கை.

காகால்‌, நிக்கோலை வாசிலீவிச்‌ (Gogol, Nicholai 1808-1852) ரஷ்ய நாவலாசிரியர்‌, நாடகாசிரியர்‌. புஷ்கின்‌ (த.க.) என்‌ற சிறந்த ரஷ்யக்‌ கவிஞருக்கு இவர்‌ நண்பரானார்‌. அக்‌கவிஞரே இவருக்கு வேண்டிய ஊக்கமளித்து எழுதத்‌ தூண்டினார்‌, இவர்‌ எழுதிய டாரஸ்‌ புல்பா (Taras Bulba) என்ற வரலாற்று நாவலும்‌, இறந்த ஆன்மாக்கள்‌ (Dead souls) என்ற நாவலும்‌ மிகச்‌ சிறந்தவை. இவரை இக்காலத்து ரஷ்யத்‌ தன்மை நவிற்சிக்‌ கொள்‌கையின்‌ (Realism) தந்தை என்று கூறுவர்‌. சமூக வாழ்க்கையில்‌ உள்ள ஊழல்களை எடுத்துக்காட்டி, எள்ளித் திருத்துவதில்‌ இவர்‌ வல்லவர்‌. இன்ஸ்பெக்டர்‌ ஜெனரல்‌ என்னும்‌ நாடகத்தில்‌ அன்றைய அரசாங்க உத்தியோகஸ்தர்களின்‌ தவறுகளை நகைச்சுவை தோன்ற இடித்துக்‌ காண்பிக்கிறார்‌.

காகாஷீமா (kagoshima) ஜப்பானில்‌ கியூஷு தீவிலுள்ள துறைமுகப்‌ பட்டினம்‌. இது நாகா சாக்கியிலிருந்து 90 மைல்‌ தொலைவிலுள்ளது. கலங்கரை விளக்‌கம்‌ ஒன்று உள்ளது. துணி, பட்டு, கண்ணாடி, சிகரெட்டு ஆகியவை முக்கியத்‌ தொழில்கள்‌. மக்‌. 2,29,462 (1950).

காகிதம்‌: மனிதன்‌ தன்‌ வழித்தோன்றல்களின்‌ நலங்கருதித்‌ தன்‌ அறிவும்‌ தன்‌ காலத்து நிகழ்ச்சிகளும்‌ மறையாமல்‌ நிலைத்‌திருக்க எழுதி வைக்க விரும்பிப்‌ பல சாதனங்கள்‌ கண்டுபிடித்தான்‌. முதலில்‌, கற்களில்‌ தன்‌ அலுவல்களைப்‌ பதிவு செய்துவைத்தான். கொஞ்ச காலத்திற்குப் பின்‌, மரப்பட்டைகள்‌, கொம்புகள்‌, கன்றின் தோல், வெள்ளாட்டுத்தோல்‌, உலர்ந்த இலைகள் ஆகியவற்றைப்‌ பயன்படுத்தினான்‌. பப்பைரஸ்‌ என்னும்‌ ஒருவகை நாணலும்‌, தோற்கடதாசியும்‌ பயன்படுத்தப்‌பட்டன. நைல்‌ நதிக்கரையில்‌ வளரும்‌ இப்‌பப்பைரஸிலிருந்து தான்‌ 'பேப்பர்‌' என்ற சொல்‌ பெறப்படுகின்‌றது. பேப்பர்‌ அல்லது காகிதம்‌ வருவதற்கு மூன்‌, தென்னிந்தியாவில்‌ பனை ஓலைகளே எழுதுவதற்குப்‌ பெரும்பாலும்‌ பயன்படுத்தப்பட்டன. அவற்றின்‌ மூலமாகவே, பண்டைய இந்திய இலக்கியங்கள்‌ இன்றுவரையில்‌ காப்பாற்றப்பட்டன. சுத்தஞ்‌ செய்து தண்ணீரில்‌ கொதிக்கவைத்து, வெயிலில்‌ உலர்த்தி, வெண்மையாக்கி இல்வோலைகள்‌ தயாரிக்கப்பட்டன. முதன்முதலாகச்‌ சீனாவில்‌ கி. பி. 105-ல்‌ காகிதம்‌ செய்யப்பட்டது. அப்போது காகிதம்‌ செய்யும்‌ கலை சிறிது காலம்‌ மறைபொருளாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால்‌ அராபியர்‌ சீனாவைத்‌ தாக்கியபோது அக்கலையைக்‌ கற்றுக்கொண்டனர்‌. அவர்களின்‌ மூலம்‌ அது காலக்கிரமத்தில்‌ ஐரோப்பாவெங்கும்‌ பரவியது. காகிதத்தைக்‌ கண்டுபிடித்த பெருமை சீனரைச்‌ சேர்ந்ததாயின்‌, அதைப்‌ பரப்பிய பெருமை அரபியரைச்‌ சாரும்‌.

காகித உற்பத்தி : எந்திர சாதனக்களின்‌ மூலம்‌ நடைபெறும்‌ இக்காலக்‌ காகிதத்‌ தொழிலில்‌ மரம்‌, பருத்தி, நார்‌, கந்தைத்‌ துணிகள்‌, கழிவுகள்‌, ஒருவகைப்‌ புல்‌ முதலிய பலவகையான மூலப்‌ பொருள்கள்‌ பயன்படுகின்‌றன. மரத்தைக்‌ காகிதமாக மாற்றுகையில்‌ வெறும்‌ மரத்திலிருந்து மரக்கூழ்செய்தல்‌, கூழைக்‌ காகிதமாக்கல்‌ என்று இரு வெவ்வேறான நிலைகள்‌ உள்ளன. உற்பத்தி செய்யப்படும்‌ கூழில்‌ எந்திரத்தால்‌ அரைத்த கூழ்‌, ரசாயன முறையால்‌ செய்த சல்பைட்டுக்‌ கூழ்‌, சல்பேட்டுக்‌ கூழ்‌, சோடாக்கூழ் என நான்கு வகைகள்‌ உண்டு. முதலாவது கூழ்‌ எந்திர சாதனங்கள்‌ மூலம்‌ செய்யப்‌படுவது. மற்‌றவை ரசாயன வினைகளின்‌ மூலம்‌ செய்யப்‌படுவன. எந்திரக்‌ கூழ்‌ கரடு முரடாயும்‌ அசுத்தமான பொருள்கள்‌ கொண்டதாயும்‌ இருக்கும்‌. ரசாயனக்‌ கூழ்‌ என்பது தூய மரக்கூழ்‌. மிருதுவான மெல்லிய காகிதம்‌ செய்வதற்கு ரசாயனக்கூழும்‌, செய்தி அச்சிடும்‌ காகிதம்‌ போன்ற மட்டரகமான காகிதங்கள்‌ செய்ய எந்தரக்‌ கூழூம்‌ பயன்படுகின்றன. எந்திரக்‌ கூழாயினும்‌ ரசாயனக்‌ கூழாயினும்‌, மரம்‌ முதலில்‌ ஒரே மாதிரியான சில வினைகளுக்கு உட்பட்டாகவேண்டும்‌. காகித உற்‌பத்தி ஆலைகள்‌, சாதாரணமாகப்‌ பெரிய ஆறுகளுக்கு அருகில்‌ அமைக்க்ப்பட்டிருக்கின்‌றன. காடுகளிலிருந்து மரங்களை ஆறுகளில்‌ மிதக்கவிட்டு ஆலைகளுக்குத்‌ தருவார்கள்‌, சாதாரணமாக ஒவ்வொரு வகையான கூழுக்‌கும்‌ ஒருவிதமான மரம்‌ பயன்படும்‌. பெரும்பாலும்‌ கூழின்‌ வகை பொருளாதார நிலைக்கு ஏற்பவே தேர்ந்‌தெடுக்கப்படும்‌. முதலில்‌ வெட்டும்‌ எந்திரத்தால்‌ மரத்‌தைத்‌ தக்க அளவுடைய துண்டுகளாக வெட்டுவர்‌. பிறகு வேறு எந்திரங்கள்‌ பட்டையை நீக்கும்‌. அங்கு எந்திரக்கூழ்‌ செய்வதற்கெனத்‌ தேர்ந்தெடுத்த மரத்தை நீரில்‌ ௮ரைப்பார்கள்‌. அரைக்கும்போது உராய்வதால்‌ ஏற்படும்‌ வெப்பம்‌ நீறில்‌ கழிந்துவிடும்‌. மரத்திலுள்ள நாரும்‌ நீரில்‌ மிதந்து வெளியே போய்விடும்‌. அரைக்கும்‌ போது உண்டாகும்‌ சிம்புகளைச் சல்லடைகள்‌ சலித்து விடும்‌. மையாக அரைபட்ட பொருள்‌ கூழாகின்றது. சல்லடைகளில்‌ தங்கிவிடும்‌ பெரிய சிம்புகள்‌ சுத்திகரிக்‌கும்‌ எந்திரங்களில்‌ சுத்தம்‌ செய்யப்பட்டுத்‌ திரும்ப அரைக்கப்படும்‌.

ரசாயனக்‌ கூழ்‌ : சல்பேட்டுக்‌ கூழ்‌ : உலகில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ கூழில்‌ பெரும்பகுதி இம்முறையில்‌ தயாரிக்கப்படுகிறது. பட்டை நீக்கிய மரக்கட்டைகளைத்‌ துண்டுதுண்டாக வெட்டி, அதிருஞ்‌ சல்லடைகளில்‌