பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கலைஞன் தியாகம்

கதைகளில் எவ்வளவோ ஸ்திரீகள் பண்ணிய தந்திரங் களைப் படித்த ஞாபகம் வங்தது. என் எண்ணங்கள் புயலைப்போலத் தோன்றி என் தலையைச் சுழலச் செய்தன. அதனால்தான்் பேசாமல் எழுங்து போய் விட்டேன். அன்று முழுவதும் அந்தப் படத்தைப் பற்றிய யோசனைதான்். - .

என் மனைவியை அவைசியமாகச் சங்தேகித் தேன். உங்களைப் பயமுறுத்தி உண்மையை அறிவ தென்று எண்ணினேன். அதன் பிறகுதான்் உங்களை வருவித்து மிரட்டினேன். - -

சித்திரகாரருடைய கற்பனையின் திறமையை நான் அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் கூறிய வார்த்தைகளிலிருந்தும் என் மனைவியின் குணங்களி லிருந்தும் என் சங்தேகத்துக்கு இடமில்லையென்று பட்டது. பின் எப்படி அந்தப் படம் அவளேப் போலவே இருக்கிறது? இந்தக் கேள்விமட்டும் என். மனத்தைக் குழப்பிக்கொண்டேயிருந்தது.

ஒரு வாரம் முழுவதும் உங்கள் படத்தைக் கூர்ந்து கவனித்தேன். என் மனேவியின் மேனியையும் மிக்க கருத்தோடு பார்த்தேன். என் மனமயக்கம் அதிகமாயிற்றேயொழியக் குறையவில்லை. என் னுடைய அருமைக் காதலியிடம் காரணமில்லாமல் சிடுசிடு வென்று விழுந்தேன்; வைதேன். அவள் என் கிலேமாற்றத்தைக் கண்டு விஷயம் தெரியாமல் துடித்தாள். - - - .

அந்தப் படத்தைக் காணும்போதெல்லாம் என் மனத்தில் புயல் மூண்டது; அதை வேறு யாரும்