இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
- 'கலைமகள்' தொடர்பு வாய்த்தபிறகு சிறுகதை
எழுத வேண்டுமென்ற எனது அவா நிறைவேறத்
தொடங்கியது. அதன் விளைவே இந்தப் புஸ்தகம்.
- நான் அவ்வப்போது 'கலைமகளிலும், 'ஆனந்த
விகடன் தீபாவளி மலர்கள், தினமணி' ஆண்டு மலர்,
'சுதேசமித்திரன்’ விஜயதசமி மலர், ஆனந்த
போதினி வெள்ளிவிழா மலர், 'பாரதமணி','லோகோ
பகாரி' ஆண்டு மலர் என்பவற்றிலும் எழுதிய கதை
களில் பதினெட்டு இதில் அடங்கியுள்ளன.
- இவற்றை வெளியிட்டு ஆதரித்த பத்திரிகா
சிரியர்களுடைய பேரன்பைப் பாராட்டி என் நன்றி
யறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- இவற்றில் சில கதைகள் ஆங்கிலத்திலும் ஹிந்தி
முதலிய நம் நாட்டு மொழிகளிலும் அன்பர்களால்
மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கின்றன. அங்
வனம் மொழிபெயர்த்த அன்பர்களுக்கும் என்
நன்றியை உணர்த்துகின்றேன்.
- கதையென்று எழுதினேன்; தமிழுலகம் இதை
வரவேற்குமென்று கருதுகிறேன்; புஸ்தகம் வெளி
வருகிறது. இனி, படிப்பவர்கள் உண்டு, புஸ்தகம்
உண்டு. நான் ஏன் கவலைப்படவேண்டும்?
- கி. வா. ஜகந்நாதன்.
15–12—1941