பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

   கடிதம் எழுதும்போதும் கடவுள் துணை என்று எழுதுகிறார்கள் அல்லவா? அதுபோல இனிமேல் 'கருணாநிதி துணை' என்று எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
    இங்கு அண்ணா கலையரங்கத்தில் விழா எடுத்திருக்கிறீர்கள். வேலூர் கோட்டைக்குப் பக்கத்தில் விழா எடுத்துள்ளீர்கள். அவர் கோட்டைக்குச் செல்ல வழி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் எல்லாம் அயராமல் உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உதயசூரியன் உதிப்பதைத் தடுக்க யாராலும் முடியாது என்ற உறுதியோடு செயல்படுங்கள்-வெற்றி பெறுவது உறுதி என்று கூறி விடை பெறுகிறேன்.

_----------------_-------------

(வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் கலைஞர் பொன் விழாவில் 30.11.1988ல் உவமைக் கவிஞர் ஆற்றிய உரை)