உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 / கலைஞர் கடிதம் "மந்திரியாக ஆவதற்காகக் காமராசர் நாகர்கோயிலில் போட்டியிடப் போகிறார் என்பது விரும்பத் தகுந்தவதந்தி யல்ல! அவரைப் பற்றி இப்படி வதந்திகள் பரப்புவது அவ ருக்குத் துரோகம் இழைப்பதாகும், பதவிக்காக ஒரு காரி யத்தைச் செய்பவர் காமராஜ் அல்ல. பார்லிமெண்ட் உறுப்பினர் பதவி அல்லது மந்திரி பதவி எல்லாவற்றுக் கும் மேம்பட்டவர் அவர்.' இதுதான் தாங்கள் அளித்த நிருபர்கள் பேட்டி! இதனைக் காங்கிரசு ஏடுகளேகூடத் தெளிவாக வெளியிட் டிருக்கின்றன. இந்தப் பேட்டியைப் படித்தபோது எனக்குத் தொண்டை மண்டலத்தை ஏங்கிட வைத்த தந்திரியின் கதை நினைவுக்கு வந்தது தவறில்லை அல்லவா? பலே புத்திசாலி தாங்கள்! முன்பு மந்திரியாக இருந் தீர்கள்; இப்போது தந்திரியாகி விட்டீர்கள்- தங்கள் பேச்சின் பொருள்; எனக்கு மட்டுமல்ல- எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்றாகப் புரியும். அன்புள்ள மறவன் 2.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/58&oldid=1691873" இலிருந்து மீள்விக்கப்பட்டது