160 கலைஞர் . இல்லை என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு நிலை ஏற்படுமானால் தமிழுக்கு எதிர்காலத்தில் மறுமலர்ச் சியே இருக்காது! புரடசிப் புலவர். கிறித்துவக் கல்லூரியில் சிந்திய பொன் மொழி இது! வொரு ஆண்டும், (Syllabus) பாடதிட்டத்தில் உள்ளவை மட்டுமே அந்தந்த வகுப்புப் புத்தகத்தில் சேர்க்கப்படும். சிலபசில் ல்லாததை அச்சுக்கோத்த தற்காக சேர்த்துவிட இயலாது என பாடநூல் குழுவின விளக்கம் கொடுத்தபின்னரும் புதிய புலவர். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். தான் நாள்களிலே. "எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிற்கு-ஆண்டு பலவற்றிற்குப் பிற்கு - அந்த அந்த வசந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு, இன்றைய கவலைமிக்க எழவியலாத புன்னகையைத் தருவித்துக் கொள் கிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலம் தெரி யும்; இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்." ந்த அழகு தமிழ்ச் சொல்லோவியம் அறிஞர் அண்ணா தீட்டியது. 1976-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பாட புத்தகத்தில் ஏறத்தாழ பத்து பங்கங்களுக்கு மேல் இடம் பறக்கூடிய பெரிய கட்டுரையின் தொடக்கத்தைத்தான் ங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். அச்சியற்றப் பட்ட அந்த முழுப் புத்தக வடிவையும் நான், பத்திரிகை நிருபர்களுக்கு நேரிலேயே கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னேன். நான் பெரியாரின் கொள்கைகளையும் அவரது எழுச்சிமிக்க தியாக வரலாற்றையும் நாட்டில் பரப்புவதற்கு எனக்குக் கற்றுக் கொடுக்கிறார் திடீர்த் தமிழ்ப் புலவர்!
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/170
Appearance