உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 . . கடிதம். எப்படியோ, அவர்கள் நம்மைப் போற்றியோ அல் லது தூற்றியோ மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. இந்த நிலை நமக்குத் தெளிவாகப் புரிகிறபோது புரிகிறபோது அவர்கள் மீது கோபமோ, குரோதமோ நிச்சயமாக ஏற்படாது! ஏற் படவும் கூடாது. எல்லோரும் சேர்ந்து, எல்லோரும் உழைத்து, உரு வாக்கப்பட்டதுதான் கழகம். நாங்களும்தான் உழைத்து உருவாக்கினோம்; ஆகவே இதனை உடைத்துத் தூளாக்குகிறோம் - என்று சில பேர் ஆர்த்தெழுவதில் அர்த்தமும் இல்லை. அந்த முயற்சியில் அவர்கள் யாரும் வெற்றிபெறப் போவதுமில்லை. எனவே அவர்தம் சுடுமொழிகள் - கடுங்கணைகள் தொடரட்டும்! அவைகளால் நமது கழக எழுச்சியைத் தொட்டிட முடியாது என்ற உறுதியுடன் உழைத்திடு வோம்! அன்புள்ள மு.க. 27-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/82&oldid=1695490" இலிருந்து மீள்விக்கப்பட்டது