உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரகசியம்! அவன் கவிஞன், பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்வான் தமிழ்த்தாய்க்கு! தந்தத்தால் ஆன கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே தமிழ்க் குழவியைச் சீராட்டிப் பாராட்டு வான். கண்ணே! முத்தே! தமிழ்ப்பண்ணே ! என்றெல்லாம் கவிதைக் காதலியோடு கொஞ்சுவான். அவன் புகழ், குன்றின் மேல் ஜோதியாயிற்று. எழுத்தின் வேந்தர் என்றனர் அவனை. கருத்தின் செல்வன் எனக் கவி பாடினர் மக்கள். பழுத்த அனுபவம். கொழுத்த சொற்கள். இவைகளை வைத்துக் கொண்டு அவன் தமிழுலகில் நிமிர்ந்து நின்றான். ஏடுகள்...அவன் எழுத்துக்கோவை இனிக்காது! இல்லாவிட்டால் நாடகம்...அவன் பாடல் ஒலிக்காவிட்டால் சோபிக்காது ! திரை உலகம்...அவன் கீதங்கள் முழங்காவிடில் சுவைக் காது ! இப்படி வளர்ந்தான் அவன். 66 6 6 ஏழைகளை ஊக்குவிப்பான்! கோழைகளை வீரராக்குவான்! தாழையின் முள்ளும் வாழையின் குருத்தும் சேருமோ?' எனக்கேட்டுத் தமிழர் பண்பும் ஆரியர் கலையும் ஒட்டாது; கிழிந்துவிடும்' என்பதற்கு விளக்கம் தருவான். அவனைப் பாராட்டிப் பலர் எழுதினர். "