உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொத்துக் கிளி 149 பாவம்! விமலா அண்ணாமலைப் படுமடுவிலே வீழ்ந்து விட்டாள்; குளிர் நீரோடை என்றெண்ணி! அவள் மேலும் தப்பில்லை, அவள் என்ன செய்வாள்? அவள் ஒரு காம்பொடிக்கப் பட்ட குண்டு மல்லிகை. மலர், செடியிலிருந்து பறிக்கப்பட்டதே யொழிய, மணத்திலிருந்து பறிக்கப்படவில்லை. இன்னும் வாசனை வீகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம் அவள் ஒரு இளம் ஆனால் அவளுடைய பெற்றோர்கள் புத்திசாலிகள் ; அஞ்சாத நெஞ்சர்கள். அதனால்தான் கல்லூரியிலே சேர்த்து விட்டனர், விமலாவை! விதவை. இந்தக் கன்னி கல்லூரியிலேதான் சிக்கினாள் அண்ணாமலை யிடம். அவனுடைய அழகை ரசிக்கும் தன்மைக்கு இரையானாள், விமலா. விமலாவின் மனோ நிலையை அறியாது அழகி வேட்டை யாடுகிறான் அண்ணாமலை; ஆனால் அவன் ஒரு குண்டுமல்லிகையை முகர்ந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு ரோஜாவுக்கு ஆசைப்பட்டான். அங்கேதான் அண்ணாமலை ஒரு பெருத்த கொலை செய்துவிட்டான். ஆம்! அந்த மலரைக் கசக்கிவிட்டான். பாவம்! விமலா கெடுக்கப்பட்டாள். இன்னும் ஒன்பது மாதத்தில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுவாள். இப்போது அண்ணாமலை விமலாவைப் பற்றிக் கவலைப் படுவ தில்லை. அவனுக்குத்தான் எத்தனையோ விமலாக்கள் ‘சந்தை’ யிலே கிடைக்கிறார்களே ! விமலா அழுதாள்; புரண்டாள்! ஆனால், பலன்...? அண்ணாமலை அவளைத் திரும்பியே பார்ப்பதில்லை. வகுப்பு முடிந்ததும் அவளைப் பார்க்காமலே எழுந்து சென்றுவிடுவான், வேறொரு பக்கமாக! கிளி பாய்வதில்லையா மரத்துக்கு மரம்! எந்த மரம் பச்சை யாக இருக்கிறதோ, எந்த மரத்தில் அதிகமாகப் பழங்கள் இருக்கின் றனவோ, அந்த மரத்துக்குத்தான் தாவும் பச்சைக் கிளி அண்ணாமலையும் அப்படித்தான்! அவன் அழகியாகப் பார்த்துத் தாவுகிறான். அவன் ஒரு தொத்துக் கிளி. அந்த மரம் அல்லவா முன்பே ஆராய்ந்து தெளிய வேண்டும், அது நிரந்தர மாகத் தங்கக்கூடிய கிளியாவென்று. எண்ணத் தவறினாள் விமலா அந்தோ, அவதிப்படுகிறாள். விமலா மெள்ள மெள்ள அறிந்துகொண்டாள் அண்ணாமலை யின் ரகசியத்தை. அவள் புலியானாள்! அவள் முன்னே கண்ணகி