உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் யும், மாதவியும் வந்து வந்து போயினர். மணிமேகலை அமுத சுரபியுடன் காட்சிதந்தாள். நல்லதங்காள் தற்கொலைக்கு முயற்சிப்பதையும் பார்த்தாள். அவள் உடம்பு ஒருமுறை வியர்த்துப் பின் சில்லிட்டது. அவள் இருதயத்திலிருந்து இரத்தம் புது வேகத்துடன் பாய்ந்தது உடலிலெல்லாம். " அவன் அழகாயிருப்பதால் தானே அவன் வலையில் நான் வீழ்ந்தேன். தத்தளிக்கிறேன். அவன் அழகாயிருப்பதால் தானே பல பெண்களைக் கெடுக்கிறான். அவன் அழகைக் கெடுத்துவிட்டால்....?" என்னென்னவோ எண்ணிக்கொண்டே சென்றாள், விமலா கல்லூரிக்கு ! 6. கெமிஸ்ட்ரி பிராக்டிகல் நடந்துகொண்டிருந்தது. பையன் ஒருவன் கண்ணாடிக் குவளையை உடைத்ததைப் பற்றி விசாரணை செய்துகொண்டிருந்தார் பேராசிரியர். விமலா முக்கி முணகிக் கொண்டே சோதனையைச் செய்துகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டவர்களுக்கு வயிற்றுவலியைக் காரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கல்லவா தெரியும் நடந்த தும், இனி நடக்கப் போவதும் ! அண்ணாமலை ஒரு மூலையில் சோதனை செய்து கொண்டிருந் தான். முன்பு போல இப்போது அவன் விமலாவைக் கவனிப்ப தில்லை. விமலா மெதுவாகத் தன்னிடத்தை விட்டு நகர்ந்தாள். அணையப் போகும் விளக்கு பிரகாசத்துடன் எரிவதில்லையா? அதைப்போல அவள் முகத்திலே ஒரு ஒளி; சிறு மகிழ்ச்சி காணப்பட்டது. அவள் கையிலே ஒரு 'பாட்டில்' இருந்தது. விமலாவை மாணவர் யாரும் கவனிக்கவில்லை. விமலா பாட்டிலை மெதுவாகத் திறந்தாள். கொஞ்சம் தயங்கினாள். நெருப்புக் குழியில் விழப்போகுமுன் அனலைக் கண்டு அஞ்சலாமா? கடலிலே குதிக்கத் தீர்மானித்தபின் அலையைக் கண்டா கண்டா மனங் குலைவது? பாட்டிலில் உள்ளதை அண்ணாமலையின் முகத்திலே கொட்டினாள். 'ஆ' வென்று அலறி விழுந்தான் அண்ணாமலை. அவன் முகத்திலே கடுகு தாளிக்கப் பட்டது. அதே சமயத்தில் விமலாவும் கீழே சுருண்டு விழுந்தாள். ஆம்! அண்ணாமலை முகத்திலே விமலா “நைட்ரிக் ஆசிடைக் கொட்டினாள், அவன் அழகு மடிவதற்காக. அவளும் குடித்து விட்டாள், குடல் அறுபடும் அளவுக்கு அக்கினித் திராவகத்தை! "