உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனக்கிண்ணம் தலைவர் பேச ஆரம்பித்தார். புது நிலவு போன்ற மணமகளை யும், பூரிப்பு வழிய அமர்ந்திருக்கும் மணமகனையும் பாராட்டினார். பழைமையின் அடிச்சுவடுகள் மறையாமலிருக்கிற அந்தப் பட்டிக் காட்டிலே பகுத்தறிவுச் சுடர் கொளுத்திவைத்த அந்த இளை ஞனை இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்ந்தார். வாழ்வுக்கு ஒளி தரப்போகும் தன் காதலனைத் தலைவர் பாராட்ட, அது கேட்டு வெட்கத்தோடு அமர்ந்திருக்கும் புதுப் பெண்ணின் நெஞ்சம் இன்ப ஓடையாயிற்று. புரோகித மணம் ஏன் கூடாது-புரட்சித் திருமணம் எப்படி வளர்ந்தது என்பதற்கான விளக்கங்களை வாரி வாரித் தலைவர் இறைத்தார். வந்திருந்த வண்டினங்கள் அந்தத் தீந்தமிழ்த் தேனை உண்டு மகிழ்ந்தன. பொருந்திய மணம் என்றால் என்ன ; தேவையான தகுதியான - விளக்கம் தந்தார். என்ன வயது திருமணத்திற்குத் என்பது பற்றியும் பழைமையும் புதுமையும் மோதிக்கொள்ளக் கூடாது என்று கேலி செய்தார், ஆதாரங்கள் காட்டி. தீராவிடம்" என்று திராவிடம் என்று ஓர் இனம் உண்டு. று ஓர் இனம் உண்டு. "தீராவிடம் இழித்துரைப்பர், தீயோர். தீயோருக்குத் தீராவிடம் தான்!’ என்று சான்றுகளை வழங்கினார்.