உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை ' ஏடுகள் பலவற்றில் குறிப்பாக ‘முரசொலி'யில் நான் அவ்வப்போது எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். இந்தக் கதைகளில் சில ஆங்கிலத் திலும், வேறு மொழிகளிலும் ஏடுகளில் வெளி வந்துள்ளன. பிரச்சினைக்குரியவைகளாக்கப்பட்ட கதைகளும் உண்டு. எல்லாக் கதைகளையும் இந்த நூலில் தொகுத்திட எடுத்த முயற்சி ஈடேறவில்லை. விடுபட்டுப்போன சிறுகதைகளை, தமிழ்க்கனி பதிப்பக'த்தார் அடுத்த பதிப்பில் இணைத்து வழங்கிடுவார்கள் என்று நம்புகிறேன். இன்னும் எழுத வேண்டிய சிறுகதைகள் ஏராளமானவற்றுக்கு நெஞ்சில் அடித்தளம் அமைத்துள்ளேன். அந்தக் கட்டிடங்களும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் கட்டி முடிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தாருக்கு என் நன்றி! சென்னை 5-9-77 அன்புள்ள, மு. கருணாநிதி