உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற கலைஞர் அவர்களின் அரும் படைப்புகளில் சிந்திய சில வைர மணிகளின் தொகுப்பே இந்நூல். ⚫ கலைஞரின் சி றுகதைகள் ’ எனும் தலைப்பில் வெளியிடப்படும் இந்நூலில் அடங்கிய கதைகள் முன்னரே ஏடுகள் பலவற்றில் மலர்ந்து மணம் பரப்பி இருந்தாலும் அம்மலர்களை ஒன்றாக இணைத்து எழில் ஆரமாக்கி தமிழன்னைக்குச் சூடி மகிழ்வதில் நாங்கள் பெருமை காண்கிறோம். காலத்தை வெல்லும் கருத்துக்களைப் படைக்கும் அருந்திறன் கொண்ட கலைஞர் அவர்களின் எழுத் துக்கள் நடையாலும், கருத்தாலும் படிப்பவரின் சிந்தனையைக் கிளறி பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடியவை என்பதை நாடு நன்கறியும். அவர் எழுத்தில் ஒரு துடிப்பு இருக்கும். அது ஒவ் வொரு தமிழனின் உள்ளத் துடிப்பையும் உள்ளடக்கிய துடிப்பாகும்! அவர் எழுத்தில் ஒரு லயம் மிளிரும். அந்த லயம் படிப்பவரின் உள்ளத்தை உருக்கும் சக்திமிகு லய மாகும் ! அவர் எழுத்தில் தனி ஒரு நளினம் இருக்கும். அந்த நளினம் ஒவ்வொரு வாசகரின் உள்ளத்தையும் வசீகரிக்கும் வனப்பு மிகு நளினமாகும்!