பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலிங்கப்போர் மூளுகிறது. பல இன்னல்களுக்கிடையே வெற்றிபெற்றுத் திரும்புகிறான் கருணாகரத் தொண்டைமான். அவனுக்கு அம்மங்கை மனைவியாகிறாள்.

இதுதான் கதை!

திரு தமிழ்வாணன் தங்கமானவர். அவர் உள்ளத்தில் கட்டிபாய்ந்துள்ள தங்கக் கட்டியை மாற்று உரைத்துப் பார்த்து, தங்கம் இவ்வளவு, கலப்புச் சரக்கு இவ்வளவு என்று, அவர் மாதிரி, குறி-ஜோஸ்யம் சொல்லும் தலைவிதி எனக்கு வேண்டவே வேண்டாம். அவர் பிழைப்புத் தெரிந்தவர். அதனால்தான், அவருக்குத் தம் மனத்தில் பட்டதைச் சொல்லும் பக்குவம் உருவாகியிருக்கிறது. அந்தப் பக்குவத்திற்கு மாறு பெயர் ஒன்றும் உண்டு: அதுதான்: ‘ஸ்டண்ட்’!-இல்லையென்றால், சரித்திர புருஷர். பேராசிரியர் கல்கி அவர்களின் சரித்திர நாவல்கள் தலையணையாக உபயோகப்படுத்தவே பயன்படும் என்று புறம் பேசியிருப்பாரா?-பிழைக்கத் தெரியாதவர் அவர்!

“...வாரா வாரம் என் தொடர் கதைகளைப் படித்து, வந்த பதினாராயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும் ஊக்கமும் இத்தகைய மாபெரும் வரலாற்றத் தொடர்கதைகளை எழுதி முடிப்பதற்கு உறு துணையாயிருந்தன...!” என்று குறிப்புக் கொடுத்திருக்கிறார் கல்கி. பிறர்முன் எளியனாய் நிற்கும் மனப்பண்பு. அனைவருக்கும் கைகூடி வருவதில்லையே!

கோவி. மணிசேகரன், “வரலாற்றுத் தமிழ் புதின உலகின் வழிகாட்டியாக விளங்கியவர் அமரர் கல்கி

113