பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் ஆனந்தியிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

பால கங்காதரத் தேவர் என்றொரு பணக்காரப் போக்கிரி. அவன் வலையில் மோசம் போனவள் இந்த ஆனந்தி. ஆனந்தியின் கற்பு சூறையாடப்பட்ட மர்மம் டைகருக்குத் தெரியும்.

இதற்கிடையில், மைனர் அழகப்பன் தன் உற்ற தோழனான நயினாவுடன் பெண்பார்க்க வருகிறான். மணப்பெண் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார்கள். சென்ற விடத்தில், நச்சுப்போன்ற தகவல் கிடைக்கிறது. சிந்தாமணி ஈன்றெடுத்த களைப்புடன் இருப்பதாக நர்ஸ் மூலம் செய்தி கிடைக்கிறது. அழகப்பன் மருள்கிறான்.

இதன் காரணமாகப் புயல் மூளுவது இயல்பே அல்லவா?

சூழ்ச்சி, வளை பின்னுகிறது.

சூழ்ச்சிக்கு வடிவமான டைகர். அழகப்பனைக் கோழையாக்கிக் குற்றவாளியாக்கிவிட்ட பெருமையுடன், டைகர் முன் வந்து சிந்தாமணியை மணப்பதாக உறுதி சொல்கிறான்.

இப்பொழுது, டாக்டர் ஆனந்தியை மணக்கக் கனவு காணும் உத்தியோகம் அழகப்பனுக்கு வாய்க்கிறது. ஆனால், பாவம், தன் தோழன் நயினாவும் தன்னைப் போலவே கனவு காணும் அந்தரங்கத்தை அறியான்!

142