பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ்க்கை என்பது உயிரும் உடலும் கொண்ட மனித பிண்டம், பார்க்கும் அல்லது காட்டும் முகக் கண்ணாடி மட்டுமன்று. உள்ளத்தின் உணர்வுகள் தலைமைப் பாத்திரங்கள் ஏற்று நிகழ்த்தும் ஒரு கூத்து. அந்தக் கூத்திற்கு இங்நிலையொத்த வாய்ப்புக்கள்தாம் சூத்திரக் கயிறுகளாக முறுக்கேறி, வாழ்க்கை எனும் ஜீவ தத்துவத்திற்கு ஊட்டமும் ஓட்டமும் அளிக்கின்றன. விட்ட குறை-தொட்ட குறையின் விளை பலன்களோ அல்லது, இவ் விளைபலன்களின் சாகசப் போக்குகளோ, அன்றி, இவற்றின் சார்புச் சூழலின் சாயல்களோதாம் வாழ்வாகவும், வாழ்வின் விதியாகவும் பரிமளிக்கின்றன.

இப்படிப்பட்ட நியதி பூரணியையும், அரவிந்தனையும் மாத்திரம் கட்டுப்படுத்தாமல் இருக்க முடியுமா? இருக்கக் கூடுமா? .

‘காரணமோ, தொடர்போ புரியாமல், அதை யடுத்தாற்போல மாலையில் தேடிவந்தானே, அந்த இளைஞனின் முகம் அவள் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப்போல ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள் அவள். அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது; சொல்லித் தெரியாத, அல்லது சொல்லுள் அடங்காத சுகம் இருக்தது!’

இந்த மகிழ்ச்சி, களிப்பு, சுகம் ஆகிய இனிய உணர்வுகள் தாம் ‘குறிஞ்சி மலரின்’ வாழ்வியல் கதைக்கே மூச்சிழைகள்!

இன்பத்தின் முடிவுக்குத்தான் இன்பம் தொடங்குகிறது போலும்!

56