பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பெரியோர்களால் ஜோடி சேர்த்து விடப்படும் அவனும் அவளும் புது மோகத்திலே, இளமைத் துடிப்பிலே, சிறு பிராய விளையாட்டுத் தவிப்பிலே, பருவத்தின் இன்பக் கிளுகிளுப்பிலே மயங்கி, தங்களே மறந்து, சூழ்நிலை மறந்து, உலகையே மறந்து -தாங்களே உலகம், வாழ்வு மிக இனிமையானது என மயங்கி-இன்ப மைனாக்களாகத் திரியலாம். பிறகு மோகம் தீர்ந்து விழிப்புற்று நோக்கும்போது பரஸ்பரம் அலுப்பும் வெறுப்பும் அதனுள் கசப்புமே ஏற்படுகின்றன. இந்த மோகம் கலைந்த விழிப்பும் நெருக்கடியும் சில தம்பதிகளுக்கு பல வருஷங்கள் கழித்து ஏற்படலாம். பலருக்கு பலமாதங்களிலேயே நிகழலாம். சிலருக்கு சில தினங்களிலும், சிலருக்கு 'முதல் இரவு' முடிந்த மறுநாளிலும் கூட ஏற்பட்டு விடலாம். எப்படியும் இந்த நெருக்கடி பிறக்கவே செய்கிறது.

 இதன் பயனாக மேல் நாடுகளில் விவாக ரத்துக்கள் பெருத்து வருகின்றன. கீழ்திசை நாடுகளில் குடும்பச் சிதைவும், 'தள்ளிவைத்தல்' வாழாவெட்டியாகுதல் முதலியனவும் மலிகின்றன. விவாக ரத்து உரிமை இப்போது சட்டமாகி விட்டதால், இங்கும் இனி ரத்து வழக்குகள் அதிகமாகும் என்பதில் ஐயம் கிடையாது. இந் நிலை காரணமாக, மறைமுக விபசாரம் வளர்கிறது. 'ஹிஸ்டீரியா' நோயும், வேறு பயங்கர வியாதிகளும் தற்கொலைகளும் பல்கி வருகின்றன.
 ஆணும், பெண்ணும் மரப்பாச்சிகளோ,  ஸெலுலாயிட் பொம்மைகளோ அல்ல-சும்மா விளையாட்டுப் போக்கில், சிறு பிள்ளைத்தனமாக, ஒன்று சேர்த்து தனி அறைகளில் தள்ளிவிடவும், பின் வாழ்வு பூராவும் ஒன்றாக வாழும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படவும்