உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கல்வத்து நாயகம்


பூவிருந்த வாசமெனப்
பூதலத்து மீதலத்து
மேவிருந்த நாதனருண்
மேன்மைமிகு மேலோராய்த்
துாவிருந்த முத்தர்குலச்
சுத்தபர தத்துவரே
காவிருந்த கீழைநகர்
கல்வத்து நாயகமே!


கேடுமுறித் தற்பகலுங்
கீழ்மைதரு மேழமையாம்
பாடுமுறித் துற்றமலப்
பற்றுமுறித் தாளிரோ
வாடுமுறித் தோங்குசித்தீக்
மாமரபில் வந்தபெருங்
காடுமுறித் தார்குலத்தீர்
கல்வத்து நாயகமே!


ஆரணமும் பல்கலையு
மாய்ந்துரைத்த வான்மீக
பூரணமெய் ஞானதவப்
போதனைக ளத்தனையுஞ்
சீரணமுன் றேர்ந்துணர்ந்த
செல்வருமச் செல்வர்தரு
காரணமு நானென்றீர்
கல்வத்து நாயகமே!