பக்கம்:கல்விச் செல்வம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

 எண்ணங்களைச் முத்துக்களாகத் தந்துள்ளனர் நமது ஆன்றவிந்தடங்கிய சான்றோர்.

அந்தக் கல்விப் பற்றிய சிந்தனைச் செழுமைகளை எல்லாம் ஒருங்கு தொகுத்து கல்விச் செல்வம் என்ற பெயரால் தமிழர்கட்கு நாங்கள் வழங்குகிறோம்.

கல்விப் பேருண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் கண்டனர். அதனையே மக்களுக்கு விண்டனர். தம் கொள்கையே வெற்றிபெறும் என்று கோட்பாட்டைக் கொண்டனர்.

கல்வியில் மாற்றங்களையும் சீர்த்திருத்தங்களையும் உலகனைத்தும் காணவிழைகிறது. இந்தியாவிலும் தமிழகத்தில் கல்விச் சீர்திருத்தம் முறுக்கேறி வருகிறது.

இந்த நல்ல நேரத்தில் ஆறு ஏழு ஆண்டுகட்கு முன்பு சங்க கால முதல் தற்காலம்வரை கல்விபற்றியசிந்தனைகளைத் தொகுத்து தோழர் இரவியிடம் அளித்தேன்.

தோழர் இரவி இதற்கு உரையும் வேண்டும் என்று பணித்தார். எனக்குள்ள ஒய்வற்ற சூழலில் இதனைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து விட்டேன்.