பக்கம்:கல்விச் செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

திருக்குறள்

ற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ் விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.

கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாத வர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.

தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் துாறும் அறிவு.

யாதானூம் நாடாமால், ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத ஆறு.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.