18
வண்ணக்களஞ்சியம்
கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்.
அறிதோறும் அறியாமை கண்டற்றால்
நவில்தொறும் நூல்நயம்.
இராதாகிருட்டினன் கல்வியும் கலையும்
தலைமையிடம் கல்விக்குத் தாரோமேல் நாட்டில்
நிலையாது மக்களாட் சி.
அறிவு திறமை பெறுவதா கல்வி?
பிறருடன் ஒத்துவாழ வே.
அறிவை வளர்ப்பதுடன் உள்ளத்து அருளை
குறித்துாட்டல் கல்விப் பயன்.
சமையம், இலக்கியம் மெய்ப்பொருளைக் கற்றபின்
அமையும் அறிவின் வளம்.
உள்ளத்தை உள்ளுயிரை ஒட்டாக் கலைக்கல்வி
கொள்ளாது வாழ்வில் நிறை.
சீர் சிறந்த நூலைப் பயில்வது; சீர் சிறந்த
உள்ளத்தோடு ஆடலும் ஆம்.
பல்கலை மன்றங்கள் பண்பாட் டுறைவிடங்கள்
கல்விமட்டும் காட்டல் இலை.
உடலோம்பும் கல்வி புறக்கணிக்க ஒண்ணா
திடவாழ்வின் தேவை கலை.
கல்வியின் மேன்மைத் தரத்தினைக் கண்டறிதல்
நல்லபணி நாட்டினுக் கு.