பக்கம்:கல்விச் செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ல்வி சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் பாடினார். கல்வியின் சிறப்புகளைப்பற்றி இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அறிஞர் பெருமக்களின் கவிதைகளிலிருந்தும் மிக அருமையாக த. கோவேந்தன் அவர்கள் தொகுத்தளித்திருக்கிறார். இன்றைய அறிஞர்கட்கும் இளைஞர்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் எனப் பெருமையோடு வண்ணக்களஞ்சியம் இந்நூலை வெளியிடுகிறது.

இப்படி ஒரு தொகுப்பு நூல் வெளியிட வேண்டுமென்பது நீண்ட நாளைய எண்ணம், அந்த நல்ல எண்ணம் ஈடேறி வெளிவந்து, பள்ளி மாணவ மாணவியர்களின் பிஞ்சுள்ளங்களில் தவழும் இந்த இன்பநாள்தான் வண்ணக் களஞ்சியத்திற்கு பெருமை சேர்க்கும் நாள்.

இந் நூலைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அறிவுக் களஞ்சியமாகத் திகழப் பெரிதும் விழைகிறோம்.

தொகுத்தும், அச்சிட்டும் உதவிய ஆசிரியருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வணக்கம். நன்றி.

வண்ணக்களஞ்சியம்