பக்கம்:கல்வி உளவியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கல்விஉளவியலின் இயல்பும் அளவும் கல்வி:உளவியல் என்னும் தொடரில் கல்வியாவது எதனைக் குறிக்கின்றது? உளவியல் எதனை உணர்த்துகின்றது? என்பதை ஆராய வேண்டும். முதலில், கல்வியைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். ஒரு காலத்தில், கற்பித்தல்மட்டுமே கல்வி என்றும், படிப்பு, எழுத்து, கணிதம் ஆகிய மூன்றையும் குடிமையைப்பற்றிய சில உண்மைகளையும் பயிற்று வித்தலே கல்வி என்றும் கருதினர். இது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது. அடிப்படைப் பாடங்களில் பயிற்சி பெறுதல்மட்டும் கல்வியன் று ; அது அதனிலும் சாலப் பெரிது. அன்றியும், நீண்டகால மாக, கல்வியில் மாளுக்கன் தான் கண்ட அறிவையும் மனப்பான்மை களையும் எப்படியாவது உட்கொள்வதாகவும், கல்வி அவனுக்குள் ஊற்றப் பெறுவதாகவும் கருதப்பெற்றது. மாளுக்கனின் உள்ளம் ஒரு வெற்றிட மாகவும், அதை ஆசிரியர் அறிவுத்துணுக்குக்களால் நிரப்புவதாகவும் கொள்ளப்பெற்றது. கல்வி என்பது நாம் ஒருவனுக்கு ஊற்றக்கூடிய பொருளன்று ஊட்டக்கூடிய பொருளுமன்று. அதை அவனே அட்ையவேண்டும். இன்றைய கல்வி ஆராய்ச்சிகளும், மக்களைப்பற்றிப் பிறதுறைகளால் அறிந்தனவும் கல்வியானது மக்களின் நடத்தையை மாற்றும் ஒரு செய்முறை என்று காட்டுகின்றன. கல்வியில் மூன்று அடிப்படைக் கூறுகள் உள. அவை: தனியாள், அவன் வாழும் சூழ்நிலை”, தனியாளுக் கும் சூழ்நிலைக்கும் இடையில் நிகழ்கின்ற இடைவினை. மனிதனின் பிறப்புமுதல் இறப்புவரையில் அவனுக்கும் அவன் வாழும் சூழ்நிலைக் i genuri - individuai; a sústav - environment; s as sia:interaction. - க.உ.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/22&oldid=777968" இலிருந்து மீள்விக்கப்பட்டது