பக்கம்:கல்வி உளவியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கல்வி உளவியல் கும் இடையருத இடைநிகழ்ச்சியும் இடைவினையும் நடைபெற்று வருகின்றன. தனியாள் சூழ்நிலையால் பாதிக்கப் பெறுகின்றன் ; சூழ்நிலை அவனே மாற்றுகின்றது. அவன் இடையருது இயற்றும் இடைவினை. களால் சூழ்கிலையும் மாற்றப் பெறுகின்றது. இந்த இடைவினைகளால்தான் கல்வி ஏற்படுகின்றது. குழந்தை அழுகின்றது. தாய் அதனை எடுத்துப் பாலூட்டுகின்ருள். அழுகை கின்று போகிறது. பிறிதொரு சமயம் அழுகின்றது; இப் பொழுது பசியால் அல்ல ; சிறுநீர் விட்டதால் ஆடை கனயவே குளி ரால் அழுகின்றது. தாய் கனந்த ஆடைகளை நீக்கி வேறு ஆடைகளை உடுத்துகின் ருள்; படுக்கையையும் மாற்றுகின்ருள். அழுகை கிற்கிறது. அழுதால் பல நலன்களைப் பெறலாம் என்ற அனுபவத்தைக் குழந்தை பெறுகின்றது. டம்வில்லிக் என்ற அறிஞரின் கருத்துப்படி, ' கல்வி என்பது அதன் பரந்த பொருளில், தனியாள் தொட்டிலிலிருந்து சுடுகாடு போகும் வரையில் பெறும் எல்லாச் செல்வாக்குக்களையும் அடக்கிக் கொண்டுள்ளது” என்பதாகும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுமுன்னரே வீட்டிலும் தெருவிலும் விளையாட்டின் மூலமும் அன்ருட வாழ்க்கையின் மூலமும் எத்தனையோ செய்திகளைக் கற்கின்றன’ என்பதை நாம் அறிவோம். ஆகவே, கற்பாரின் செயலையோ, உணர்ச்சியையோ, எண்ணத்தையோ மாற்று வதே கல்வியெனப்படுகின்றது. நமது வாழ்க்கையை உற்றுநோக்குங்கால் நாம் கணந்தோறும் நமது பெளதிகச் சூழ்நிலையோடும் சமூகுச் சூழ்நிலை யோடும் ஊட்டுகின்ருேம். கல்வியின் நோக்கம் யாதெனில், நல் வாழ்க்கை நடத்த நம்மை நமது சூழ்நிலைக்குப் பொருத்தமுறச் செய்வதில் துணைசெய்வதாகும். இந்நோக்கத்தைப் பெற அது நம் செயல்களை மாற்ற முயலுகின்றது. ஆகலின், கல்வியின் இலக்கணமாவது ஒருவரை வாழ்க்கைக்குப் பொருத்தமுறுதற்பொருட்டு மாற்றம் செய்வதாகும். இனி, உளவியலைப்பற்றிச் சிறிது பார்ப்போம். உளவியல் என்பது உயிரியின் மனச்செயல்களை வரையறுத்துக் கூறும் ஓர் அறிவியல்துறை. உயிருள்ள ஒரு மனிதன் மாறிமாறி வரும் உலகிலுள்ள பொருள்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏனையோருக்கும் இடைவினையாற்றுவதைப் படிப்பதே உளவியலாகும். அது நம் அனுபவங்களையும் செயல்களையும் பிறவற்றை யும் முறைப்படுத்திக் கோவை செய்து வெளியிடுகின்றது. 4 L$&όεά - I)umville. 5 a goń -organism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/23&oldid=777993" இலிருந்து மீள்விக்கப்பட்டது