பக்கம்:கல்வி உளவியல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 217 (3) சமூகமும் அதன் கிலேயங்களும் நெகிழ்ச்சியுடையவை. மனிதன் தன் கூர்த்த மதியால் அவற்றில் எல்லையற்ற முன்னேற்றத்தை உண்டாக்க முடியும்; மனிதன் ஆக்குவதிலும், செய்வதிலும், முயலுவதி லும் திறம் படைத்தவன் ; நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஓரளவுக்கு மனிதன் கைத்திறனுல் படைக்கப்பெற்றதே ; அது மாறக்கூடியது. இவை போன்ற பல கருத்துக்களை மாளுக்கன் சமுதாய வேலைகளில் பங்கெடுத்துக் கற்கின்ருன். - இங்ங்ணம் பழையமுறைக் கல்வியில் இல்லாத ஆளுமை ஒருமைப் பாட்டிற்குரிய பல அனுபவங்கள் வேலை மூலம் பெறும் கல்வியில் கிடைக் கின்றன. அனுபவத்தின் மூலம் கல்வி வழக்க முறைக் கல்வி பெரும்பாலும் சொற்களையும் குறியீடுகளை யுமே கையாளுகின்றது. கற்றலுக்கும் குழந்தைகளின் அனுபவத்திற்கும் சிறிதும் தொடர்பு இல்லை. இதனால் தற்காலக் கல்வி நிபுணர்கள் பொருள்களைப்பற்றி நேரில் அனுபவம் மூலம் கற்க வேண்டும் என்று வற். புறுத்துகின்றனர். குழந்தைகளின் ஆர்வம், அவர்களின் இயக்கம், அவர்களின் உரையாடல், அவர்களின் சிந்தனை ஆகியவைகளே முக்கியம். இவை இளைஞர்களின் தன் முயற்சிகளுக்கு இடக் தருவதால் கற்றல் மகிழ்ச்சியுடன் நடைபெறுகின்றது. வழக்க முறைக் கல்வி.ால் பெறும் தன்வயமாக்கப்பெருத செய்திகளும், செய்தித் துணுக்குகளும் குழந்தைகட்கு யாதொரு பயனும் தருவதில்லை. அவை அவர்களின் வாழ்க்கைக்கு எள்ளளவும் பயன்படுவதில்லை. அவற்றைக் கொண்டு குழவிகள் யாங்ங்னம் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு அடைதல் முடியும்? கற்றலுக்கும் அனுபவத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை உளவிய லாரையும் கல்வி வல்லாரையும் தவிர, அறிவுடைய பெரியோர்கள் யாவரும் அறிவர். இதனைப் புலவர்களும் பெருந்தலைவர்களும் அழகாக எடுத்துக் கூறியுள்ளனர். பெஸ்டலாஸ்லி * என்ற அறிஞர் இதனை ' சொற்களுக்கு முன் பொருள்கள் ” என்று இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். பொருள்களை ஆராய்வதால்தான் உண்மை யறிவு உண்டாகின்றது ' என்று கூறுகிருர் கன்பூலியஸ்' என்ற அறிஞர். . 4 a Glusio-sorsiosrst - Pestalozzi. * * * sirgsólusio - Confucius,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/239&oldid=778014" இலிருந்து மீள்விக்கப்பட்டது