பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இணைப்பு - 1

களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள்

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ
அழலவிர் சுழல் செங்கண் அரிமாவாய் மலைத்தானைத்
தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடலனைப்பக்
கூருகிரான் மார்பிடத்த கொலைமலி தடக்கையோய்!

(தாழிசை)


முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபணிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைத்த மறமல்லர்
அடியோடு முடியிறுப்புண் உயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்கனத்துப் புடைத்துநின் புகழாமோ?

கவியொழி வியனுலகம் கலந்துட னனிநடுங்க
வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்கோவும்
மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுதின் சினமாமோ?

படுமணி இளநிரைகள் பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்த்துதிறல் வேறாக
எருமலி பெருத்தொழுவின் இறுத்ததுதின் இல்லாமோ?

(அம்போதரங்கம்)

(பேரென்)


இலங்கொலி மரகதம் எழில்மிகு வியன்கடல்

வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்