இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி வேங்கடசாமி 102
மணியொளி மலமறு கனலி நின்னிறம்
மழையது மலியொலி மலிகடல் அலையொலி
முழையுறை அரியது முழக்கம் நின்மொழி
(இடையெண்)
வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை
ஒருவினை ஆகி உலகுடன் உணர்ந்தனை
(சிற்றெண்)
உலகுடன் உணர்த்தனை
உயிர்முழு தோம்பினை
நிலவுறழ் நிலத்தனை
நிழலியல் ஆக்கையை
மாதவர் தாதையை
போதிவர் பிண்டியை
புலவருட் புலவனை
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
அருளுடை ஒருவர் நிற் பரவுதும் எங்கோ
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த
நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
ஒற்றைச் செங்கோல் ஒச்சிக்
கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே