81 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி
இது நேரிசை வெண்பாலினால் அந்தாதித் தொடையாகச் செய்யப்பட்ட நூறு செய்யுட்களையுடையது. கயிலைமலையிலும் காளத்திமலையிலும் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் நக்கீரதேவநாயனார். இவர் கடைச் சங்க காலத்திலிருந்த நக்கீரர் அல்லர், களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இருந்த மற்றொரு நக்கீரர்.
திரு ஈங்கோய்மலை எழுபது
ஈங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல்பாடப் பட்ட எழுபது வெண்பாக்களால் ஆன நூல். இதில் 49 முதல் 61 வரையில் உள்ள பதின்மூன்று பாடல்கள் மறைத்து போயின. இந்த நூலைப் பாடியவரும் கபிலதேவ நாயனாரே.
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
இது திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்ட தோத்திர நூல். அகவல் வெண்பா கலித்துறை என்னும் மூன்றுவகைச் செய்யுட்களினால் அந்தாதித் தொடைய மையப் பாடப்பட்ட பதினைந்து செய்யுட்களையுடையது. இதுவும் நக்கீரதேவநாயனாரால் இயற்றப்பட்டது.
திருவெழு கூற்றிருக்கை
இது அகவற்பாவினால் இயற்றப்பட்ட 56 அடிகளைக் கொண்டது. கடைசியில் ஒரு வெண்பாவையும் உடையது. இச்செய்யுனை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் ஒழிபு இயல் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். அதில் இதனை, இணைக்குறள் ஆசிரியப்பா என்று கூறுகிறார். பதினோராந் திருமுறையில் அச்சிடப்பட்டுள்ள இந்தச் செய்யுளுக்கும் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இச்செய்யுளுக்கும் பாடபேதங்கள் உள்ளன. இதனை இயற்றியவர் நக்கீர தேவநாயனார்.
பெருந்தேவபாணி
இது அறுபத்தேழு அடிகளைக் கொண்ட ஆசிரியப் பாவாலானது. இதன் இறுதியில் ஒரு வெண்பாவும் உண்டு. இதனை இயற்றியவரும் நக்கீரதேவதாயனாரே.
கோபப்பிரசாதம்
இது தொண்ற்றொன்பது அடிகளைக் கொண்ட அகவற் பாவாலான நூல், சிவபெருமான் மேல் பாடப்பட்டது. நக்கீர தேவதாயனாரால் இயற்றப்பட்டது.