பக்கம்:கள்வர் தலைவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கள்வர் தலைவன் 部) இ. தேங்கா -பத்திரம். ஜெ. என்னடா அது? வ. உம்-தேங்காஜெ. தேங்காயாவேண்டும் அடே! இப்படி வாருங்கள் எல் லோரும். இவரையல்லவா இன்றைக்கு நரபலிகொடுக்க இங்கே கட்டிவைத்தீர்கள் இவர் யார் தெரியுமா உங்களுக்கு ? எல். தெரியாது ! ஜெ. இவர் என்னுடைய பிராண சிநேகிதர். இவரையா கொல்லப் பார்த்தீர்கள் நீங்கள் ? எல். இல்லே சாமி இல்லே! ஜெ. நான் சொல்வதைக் கேளுங்கள். இனிமேல் நீங்கள் எப் பொழுதும் நரபலி கொடுக்கலாகாது. நான் ஆக்ஞாபிக் கின்றேன்; நமக்கொரு துன்பமும் செய்யாத எம்மனி தனையும் நாம் வருத்தலாகாது என்று நான் கட்டளே யிட்டிருக்கின்றதை மறந்தீர்களோ ? கோ. ஆமாஞ்சாமி, பொலிபோடா போனுல் கருப்பண்ணசாமி கோவிச்சிகின : அப்புறம் இந்த வருஷமெல்லாம் நமக் கொண்ணும் ஆப்பிடாதே. ஜெ. அப்படி யல்ல, ஒரு ஆட்டைப்பிடித்துக்கொண்டு போய் பலியிட்டு பூஜை நிறைவேற்றுங்கள். ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமி நல்லவேலை ! ஆடு ஒதவுமடா ? வாயெ மூடுடா உனக்கென்ன தெரியும் மனுஷனேக் கொண்ணு என்ன பிரயோஜனம் ஆட்டைக்கொண்ணு லும் திண்ணலாம். நா. எப்பொழுது பார்த்தாலும் திண்டியே இவனுக்கு. வ. ஆணு சாமி! மனுஷன் எவ்வளவுபெரியவன இருக்கருன்? ஆடு இவ்வளவுண்டா இருக்குதே. ஒரு ஆடு போதுமா? நாலு ஆடு பொலிபோட்டா அதுக்கும் இதுக்கும் சரியா யிருக்கும். ஜெ. அப்படியே. சரிதான் புறப்படுங்கள் பூசைபோட, வ. பலே! அடேகோஸ்கி இரிச்சா! மக்கன்தேவு காயி! அல் லாம் வாங்கடா. இண்ணேக்கு நரிமூஞ்சிலே முழிச் சோண்டா நாலா டுடா ! --- நா. காலாடு என்னத்துக்கடா ? வ இத்தனி பேரிருக்கிருேமே ஒரு ஆடுபோதுமா ? நானே ஒரு ஆடுதிண்ணுவனே? s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/9&oldid=779795" இலிருந்து மீள்விக்கப்பட்டது