பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ரா.

எல்லாம் சொல்லக் கேள்விதான். மலைமேல் அவள் பேரைச் சொல்லி ஆளே பலி யானாலும் கேள்வியில்லை. X

அவள் பலி அவளுக்கு அர்ப்பணம், கொலைகள் நடந்திருக்கின்றன. சொல்லக் கேள்விதான். நான் அவ்வளவு தூரம் போனதில்லை. ஆசைதான். . ஆனால் காமுப்பாட்டி, காலை ஒடித்து விடுவாளே:

{ {}

ஆனால்

ஆ ஆட்சேபணையின் தைரியத்தின் முதல்அறிகுறி. அது ஸ்திரமாக நெஞ்சில் ஊன்றிக் கொள்ளச் சில காலம் அதுகடந்து

ஆனால் காமுப்பாட்டிக்குப் பயந்துடயந்தே செத் துச் செத்துப் போய்க்கொண்டேயிருக்க எத்தனை உசிர் இருக்கு ஒரு ஆளுக்கு ஒண்னுதானே! அதுவும் ஒரு வழியா சாக மாட்டேன்கறதே?

இந்தப் பரந்த உலகம், என் உலகம். இவளுடைய நாலு சுவர்களுக்குள்ளேயே தான் அடங்கிப் போயிடுமா? நான் வாழமாட்டேன், உன்னையும் வாழவிட மாட்டேன். இதுதானே இவளுடைய வீம்புலகம். அதில் எதிரும் புதிருமாய் நாங்கள் இருவர்தானே அதன் உயிர்கள்.

ஒரு தடவை கால் முளைத்த பிறகு அதனால் எத் தனை நாள் காத்திருக்கமுடியும் ?

ஒரு மாதம்: இரண்டு மாதம் ஆறு...ஒரு வருஷம் அடகடவுளே, அன்று நான் ஒடிப்போய் இன்றைக்கு மு ன் று வருடங்களேஓடிப்போச்சே? ஐயோ எனக்கு வயசு பதினேழா