பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ல்ா, ச. ரா.

அவ்வளவு வயது அவளுக்கு ஆகவில்லை. ஆகாது.

ஆனால் காமுப்பாட்டி யென்றால் தான் முழு நாம மாய், முழுரூபம் கிடைக்கிறது. நிமிர்ந்தாள்- . இருவர் கண்களிலும் வினாவுக்குவினா உராய்ந்தது. “எங்கேடா பயணம், சொல்லிக்காமே?”

5

‘அட, ஊமையாப் போற அளவுக்குப் பெரிய மனுஷனா எப்போ ஆனே? காலையிலே கூட சரியா

போறேன். போயிண்டேயிருக்கேன்.” விளங்கத்தான் சொல்லேன். நீ சொல் ல | ம லே அறிஞ்சுக்கற அளவுக்கு உன் புத்தி கூர்மை எனக்கு இருக்குமா?”

“சொல்லிண்டு போனால் திரும்பிவரலாம். சொல்லிக் காமல்போனால்-” உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தேன். டயலாக் ப்ரமாதமா அமைஞ்சுட்டாப்போல எனக்கு அப்பவே தோணித்து ஆனால் அப்பவே துடைப் பம் என் மேல் இறங்கத் தலைப்படுவதை உணர்ந்தேன். அத்தக்கையை அப்படியே பிடித்துக் கொண்டு லேசாய் -ரொம்ப லேசாக முறுக்கியதும் விளக்குமாறு கீழே விழுந்த இசைகேடில் கட்டவிழ்ந்து அத்தனைக் குச்சிகளும் புலுபுலு பஞ்சுமிட்டாய் படர்ந்தாற்போல், துக்கத்துக்கு அவிழ்த்துவிட்ட கூந்தல்போல், பாம்பு படம்விரித்து < அசதியில் படுத்தாற்போல்

துவண்டது

“விடுடா, கையை விடுடா நாயே!”

எகிறினாள், தவித்தாள். எகிறித் த வி த் தா ள். பூ இவ்வளவு தானா? இத்தனை சோப்ளாங்கியா