இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യാദ്രു സ്പെ
உன்னருமைக் காதலனை
எண்ணி உருகாதே! 375 என்னருமைத் தோழன்
ஒருவன் இருக்கின்றான்;
அன்னவன்பால் உன்னை
அறிமுகம்நான் செய்கின்றேன்; உன்னை மணஞ்செய்ய
உள்ளம் இசைந்திடுவான்; பொன்னைப்போல் வைத்திருப்பான்!
பூதம்போல் காத்திடுவான்! தானுண்ண மாட்டான்;தன்
பங்கை உனக்களிப்பான்! 380 ஊனுயிரை வாழ்வை
உனக்கே உவந்தளிப்பான் நல்ல மனமுடையான்;
நன்றாகப் பாடிடுவான்! முல்லை நிறமூக்கு!
முட்டியிடாப் பின்கால்கள்! மாரியம்மன் கோயிலிலே
நின்றிருக்கும் மண்குதிரை நேரிலே வந்ததுபோல்
நிற்குமவன் நீண்டவுடல் 385
மூட்டைக்குக் கூனா
முதுகவனின் வல்முதுகு!
பேட்டைக்கும் ஆற்றுக்கும்.
பத்துமுறை போய்வருவான்:
37