பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69

முகமாக, தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டது ஏன்?

வெள்ளையர்கள் பொய்ப்பிரச்சாரம் என்ற கற்கோட்டையைச் இரும்புச் சம்மட்டிகளைக் கொண்டு உடைத்துத் தகர்த்துக் கொண்டு வரும் கவியரசியைப் பார்த்துக் கேட்ட கேள்வி. மக்கள் இடையே ஒரு சலசலப்பு ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தது.

சமத்துவம் என்ற சொல்லுக்குரிய பொருளைக் கேட்பது போலக் கேட்டது ஏன்? இந்த சொல்லுக்கு, நமது கவிக்குயிலுக்குப் பொருள் தெரியாதா என்ன? கேட்டவருக்கும் இது புரியாதா என்ன? பிறகு ஏன் அப்படிக் கேட்டார்-பொருள்?

சிறப்புக் கூட்டத்திலே என்ன பேசலாம் என்று சரோஜினி நினைத்திருந்தாரோ அந்த நினைப்பைச் சீர்குலைத்து, அவரது எண்ணங்களைத் திசை திருப்பி, சொல் மயக்கம் உண்டாக்கி, தேவியின் பிரச்சாரத்தை உருக்குலைத்து ஏதோ ஒரு கெட்டப் பெயரை உண்டாக்கவே, அந்த உதவி மேயர் தமது கவிக்குயிலைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்கிறார்!

முடியுமா அவர் சூழ்ச்சி இந்தியப் பெண் சிங்கமான தமது சரோஜினி தேவியிடம்? எரிமலை போல வீறிட்டு வெடித்து எழுந்தார். எரி குழம்புகள் போன்ற கருத்துக்களை அந்த வீரிய வெடிப்பு கொட்டிக் கொண்டே இருந்தது. இதோ அதிலுள்ள மணிகள்.

"தலைவர் அவர்களே! சமத்துவம் என்ற சொல்லை விளக்குமாறு கேட்கிறீர்கள்; கற்பனைச் சிறகுகளால் எங்கோ பறந்து சென்று விவாத விஷயத்தின் அடிப் படையை முழுவதுமாகவே மறந்து விட்டீர்கள்!"

க.இ-5