H35 கவிஞன் உள்ளம் டாத்குகிறது. தவிரவும் மக்கும் இது ஒரு பெரிய இழிவாகின்றது. இத்தகையவரைச் சிறையிடுதலே தகும். கம்பிக்கைக் குற்றம் செய்தவருக்கு இதுதான் சரியான தண்டனே!” எ ன்று முடிவுகட்டுகிருர்கள்; அங்ங்னமே தமது மனக் குகையில் சிறையிடுகிருவிகள், இறைவனே தவருண பாதையில் சென்றதால், முனிவர் கள் சட்டத்தைத் தமது கையில் கொண்டு இறுக்கத் தொடங்கி விடுகிருர்கள். ஒருங்கிய உள்ளத்தால் ஒர்ந்திருக்கும் காட்சியை ஒரு புராண வரலாற்றுடன், ஒரு தத்துவத்தையும் சேர்த்துக், கற்பனே நயம் தோன்றப்பாடியுள்ள கவிதை யிைப் படித்து உணர உணரப் பேரின்பம் உண்டா கிறது. கவிதை வருமாறு: 'காமன முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின் நகல் லாடைமேற் புனைந்து யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்தும் ஒருத்திதன் இளமுலைச் சுவடு தோமுறக் கொண்டார் எனச்சிறை யிடல்போல் சுட்iமனக் குகையுள் ஏகம்பத்து ஒம் மொழிப் பொருளை அடக்கிஆ னந்தம் உறுநர்வாழ் இடம்பல உளவால் ' - காஞ்சிபுராணம் (திருநகரப்படலம், 109.) (காமன் - மன்மதன்; முனிந்து - வெகுண்டு; 'கவின்ற - அழகிய கல்லாடை - காவிஉடை, வழுத்தும் - வாழ்த்தும்; ஒருத்தி காமக்கண்ணி அம்மையார்; சுவடு தழும்பு தோம் - குற்றம்; சுடர் - ஒளி; மனக்குகை கனமாகிய குகை; ஆனந்தம் - சிவப் பேற்றின்பம்)
பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/154
Appearance