பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi சில் பெருகுவதற்குக் காரணம் அம்மொழியில் அபரிமிதமாகத் தோன்றும் திறன் ஆய்வு நூல்களே. இத்துறையில் புதிய நூல் கள் அதிகம் தோன்றினல், தமிழ் இலக்கிய நூல்களைப் பயில்வோ ரின் தொகையும் அதிகமாகும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு. ஆங்கிலம் அறிக்க தமிழறிஞர்கள் இத்துறையில் ஆக்க வேலை செய்தால், தமிழ் மொழி வளம் அடைந்து, மங்கல வாழ் வைத் துறந்திருக்கும் தமிழ்த்தாய் பண்டுபோல் போழகு வாய்க்க வளாக விளங்குவாள் என்பதற்கையமில்லை. இந்நூல் ஒரளவு இத்துறையில். தொண்டு செய்யும் என்னும் நம்பிக்கை உடை யேன். படிப்போர்க்கு இலக்கிய உணர்வைத் தரும் என்ற உறுதி யும் என க்கு உண்டு. நான் எழுத்தாளர் உலகத்திற்குப் புதியவன். தக்க முன்னுாை உதவி என்னைப் பிறருக்கு அறிமுகம் செய்து வைத்த இருவாளர் பி. ரீ. அவர்கட்கும், எனது நூலைப் பதிப்பிக்கி முன் வந்த கலைவளர்ச்சிப் பதிப்பகத்தார்க்கும், உயர்ந்த முறையில் விாைவில் அச்சிட்டுத் தக்த ஜனுேபகா: அச்சகத்தார்க்கும் எனது உளமார்ச்த நன்றி. துறையூர். } 14–1–49 ந. சுப்பு ரெட்டியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/17&oldid=781615" இலிருந்து மீள்விக்கப்பட்டது