பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 109 கைக்கு வந்ததும்-என்னைக் கன்னியாகவே-பழைய உருவில் வைத்தான்! " நான்- - மடிசுமந்த-திரு மகனின் பெயர். வியாசன்!-ஞான விலாசன் ! (1-பக்.53-64) ஈண்டுக் கவிஞர் தம் கூற்றாக அறிமுகம் செய்யாமல் காவியமாந்தர் ஒருவரால் அறிமுகம் செய்வது தனித்தன்மை வாய்ந்தது, - - இவர் கவிஞர் வாலியின் மூலமாகவும் அறிமுகம் பெறுகின்றார். மீன்வழி வந்தமீனவப் பெண்ணின்ஊன்வழி வந்தஉத்தமர்; வான்வழி வந்தநான் மறைகளையும்வாங்கித் தொகுத்தவித்தகர்; பராசர மகரிஷியின்புத்திரர் வியாசரென்றுபுகழ்சால் பெயர் படைத்தபுங்கவர்! (I-பக்:334) 4 முதலில் திருமணம் ஆகாமுன் சூரியன் குந்தியைப் புணர்ந்து கன்னனை ஈன்ற பின்னர் அவளைக் கன்னியாகச் செய்தது போல!