பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 11. பாண்டு: வியாசன் மூலம் அவனை அம்பாலிகை பெற்றெடுத்தாள். வியாசனை-மீட்டும் வரவழைத்துஅம்பாலிகையைஅணுகுமாறு வேண்டினாள்; 'அருள் செய்க! என-அவன் அன்பு மனத்தைத் தூண்டினாள்! வியாசனின்விகாரத் தோற்றம் கண்டு. வாயடைத்துப் போய்அம்பாலிகை வெடவெடத்துஆதிஅந்தம் வெளிறினாள்; அபலைப் பெண் போல்வெருவினாள்; ஆயினும். வேறு வழியின்றி-வியாசனை மருவினாள்! - 'அருமை மகனே! அம்பாலிகைஅன்னை ஆவாளா? என்றுவினவினாள்; வியாசன்விநயத்தோடு விளம்பினான்! 'அன்னையே! அம்பாலிகைக்கு-ஒர் ஆண்மகன் பிறந்து. எல்லோர்க்கும் இனியனாய்இசையொடு இலங்குவான்; மைவரைபோல்-மன்னும் ஐவரைப் பெற்று-அவன் மாமறைபோல் துலங்குவான்;