பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 183 இவளைப் பார்த்தன் பரந்தாமன் துணையால் மணந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் அபிமன்யு. 41. பலராமன்: இவனும் போக்கிற போக்கில் வாலியாரால் அறிமுகம் ஆகிறான்! பலராமன்- r பிறப்பால்ஆயர் வம்சம்; ஆனால்ஆதிசேஷன் அம்சம்! வெள்ளைவெள்ளத்தில்-இவன் பாயலா யிருக்க-இவன்மேல் படுத்திருந்தவள்ளல் பெருமான்-முன்னம் வையம் வந்தபோது. இவன்இலக்குவன் எனும் பெயரில் இளவலாய் வந்தவன்; இப்போது இன்னொரு முறைஇம்பர் இறங்கி... 'கண்ணனாய் நிற்கும் கரியமாலுக்குஅண்ணனாய் வந்தவன்! நேற்று-இவன் நம்பி தம்பி; இன்று-இவன் தம்பி நம்பி! கலப்பைகையேந்தும்.