பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 219 நியாயம் பேசநான் வருகிறேன் தூது; சஞ்சயா! நீ சென்று-இதனை நேத்திரமில்லாதானுக்கு ஒது! வாசுதேவன் விவரமாய்விளம்பினான்; விடைபெற்றுஉடனே சஞ்சயன்ஊருக்குக் கிளம்பினான்! (I-பக். 327-28) இவனைப் பற்றிய அறிமுகமும் போதுமானது-கதைத் தொடர்ச்சியை அறிவதற்கு. இவனைப்பற்றிய வேறு செய்திகளை அவை வரும் இடங்களில் கண்டு தெளியலாம். இங்ங்னம் கவிஞர் வாலி ஐம்பத்தைந்து காவிய மாந்தர்களைத் தமக்கே உரிய தனிப்பாணியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார், தம்முடைய பாண்டவர் பூமியில்.’ இவர்கள் யாவருமே பூமியைச் சுருட்டும் முயற்சியில் பங்கு பெறுபவர்கள். இன்று வாலியார் சிலரை அங்கும் இங்குமாக ஒரிரண்டு வரிகளில் காட்டியுள்ளார். அவர்களை அடியேன் ஈண்டுக் காட்டவில்லை. வேறு சிலரை அவர் தவிர்த்தும் இருக்கலாம். அவர்களை அடியேனும் குறிப்பிட்டுக் காட்டவில்லை. 20 இன்று கறுப்புச் சந்தைக்காரர்கள் அரசியல் கொள்ளையாக தாம் திரட்டிய பணத்தை பூமியின் வடிவில் புதை பொருளாக்கு வதை எல்லோரும் அறியும் அளவுக்கு நடைபெறுகின்றது.