பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& வருணனை வளம் : 11 o அந்த வண்ணச் சோலையின்வயிற்றுப் பகுதியில்-ஒரு வசந்தமண்டபம் உண்டு; அங்குதான் அத்தினபுரி ராஜ குடும்பம்ஆடிப்பாடி ராத்தங்கும் சித்திராண்ணங்கள் உண்டு! (1-பக் 168-169) வருணனைக் காட்சியில் படிப்போர் மனம் ஈடுபட்டு மகிழ்கின்றது. (2) இடிம்பவனம். இடிம்பன் வாழ்ந்த இடம். அடர்த்தியாயிருந்த அந்த அடவியின் நடுவே ஓர் அழகான இடம் அந்தம் மிகுந்தஅந்த இடம்-ஒரு துறக்கம்போல்துலங்கியது; இலட்சணம் என்னும் இலக்கியத்திற்கு-ஒர் இலக்கணம்போல்இலங்கியது! அதற்குக் காரணம்அந்தப் பிரதேசம்... தானாக உண்டாகவில்லை; ஒருதவசி உண்டாக்கியது! ஏற்கெனவே இயற்கையோடுஇயைந்திருந்த வனப்பை-அந்த ரிஷியின் ஆன்மபலம்ரெண்டாக்கியது!