பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 341 காரணம் கேட்க பசுக்கள் களவு போன செய்தியைத் தருகின்றான். அர்ச்சுனன், பசுக்களைத் திருடிய பாவியர்-அஷ்ட வசுக்களாயினும் விடேன்; நான்மீட்டு வராமல்மீட்டும் என்வில்லையும் வாளியையும் தொடேன்! (I - பக். 20) என்று சூளுரைத்து, ஆயுதங்களை எடுத்துவரஅரண்மனைக்குள் சென்றான்; ஆயுதங்கள் இருக்கின்றஅறையை நெருங்கியதும்அவன் நிலை தடுமாறி-அப்படியே நிலைப்படி யோரம் நின்றான்! உள்ளேஉதிஷ்டிரன்... பாஞ்சாலியோடுபேசிக் கொண்டிருந்தான்; அன்பு தென்றலை-அவள்மேல் வீசிக் கொண்டிருந்தான்! தருமன் மார்பில்தவழ்ந்தபடிதிரெளபதி என்னும்தாமரைக் கொடி... நாணியது; கோணியது-ஒரு தோணியது-இன்பக்