பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சுவைகளின் நிறம் * 365 தான் வாசனை’ என்று கூறுவர். புறத்தே பொருள்களைக் காணும்பொழுது அகத்தே உறங்கிக் கிடக் கும் அப்பொருள்களைப் பற்றிய வாசனை மலர்கின்றது. அவ்வாசனைக்கேற்றவாறு நாம் உலகப் பொருள்களை நல்லவை என்றும் தீயவை என்றும் கொள்ளுகின்றோம். எல்லாவற்றையும் உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அது பெறற்கரிய பேறாகும். அந்நிலை கொண்ட மனம் வாய்க்கப் பெற்றவனே கவிஞன். யாவற்றையும் இரசமாய்க் கண்டு உணரும் உள்ளத்தை யுடையவனே சிறந்த கவிஞன் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இரசவிளக்கம்: இரசம் என்பது என்ன? ஒரு காவி யத்தைப் படிப்பதால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே இரசமாகும். மனம் உணர்ச்சியால் பூரித்திருக்கும் பொழுது அதில் ஒர் ஒளிவீசும்; அதுவே இன்பம்; அதுவே ஆன்மஒளி. ஆன்மா அங்குத்தான் பிரதிபலிக்கின்றது. அந்நிலையை அடைவதற்கு மனம் சலனமற்றிருக்க வேண்டும். அந்த அசைவற்ற நிலை மனத்திற்குப் பலவிதங்களில் உண்டாகலாம். யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி நிலைநிறுத்தி சமாதி நிலையில் ஆன்ம ஒளியைப் பெறுகின்றனர். உறக்கத்திலும் மனம் சோர்ந்து அசைவற்றுக் கிடக்கும்பொழுது அங்கும் ஆன்மா தோற்றமளிக்கின்றது; இன்பமும் தலைக் காட்டுகின்றது. காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கும்பொழுது ஆன்ம ஒளிவீசும்; மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். எனவே, காவியத்தைப் படித்து அதில் கவனத்தைச் செலுத்துகிறவர் கட்குச் சுவையின் தன்மை தெளிவாகப் புலனாகும். இரசப்பாகுபாடு: நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் நின்று விடுகின்றன. ஆதலால் இரசத்தைப்