பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன்தான்பிரதான காரணம்; அவன்துதிக்கை இல்லாமல் தோற்றிய வாரணம்! தன்பங்காளிகளை-அவன் பிரியமாகத் தழுவினாலும். விலா எலும்புகளில்விரிசல் விழும்; வீவு நேர்ந்தாற்போல்-அலறல் வீரிட்டெழும்! துரியோதனன் தம்பிகளில்... ஏழெட்டுப் பேரைஇடக்கையாலும் வலக்கையாலும் தலைமுடியைப் பற்றித் தூக்கி. அலைமுடியைச் சூடியஆற்றில்டி. மூசகமுடடமுக்கியெடுப்பான்; 'குய்யோ முறையோ என்றுகூவிய பின்னால்... குற்றுயிரும் குறையுயிருமாய்கரையில் விடுப்பான்! பிள்ளைகள் மரமேறிப் பழங்கள் பறிக்க... பீமன்-மரத்தைப் பிடித்து உலுக்க... பழங்களோடுபிள்ளைகளும் உதிரும்; உதிர்ந்த இடத்தில்வழிந்து கிடக்கும் உதிரம்!