பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 47 மிகுதல் என்றிருப்பதுநகுதல்! அந்த அப்பன்காரன்இன்னார்க்குஇன்னது என்பதைஇறுதி செய்து. எல்லார் தலையிலும் எழுதிஇட்டிருப்பான் நெட்டெழுத்து; ஆனால் அவனதுபிள்ளையாண்டான் நாக்கில்பச்சை குத்திப் பட்டிருப்பதோ எட்டெழுத்து! நாராயண மந்திரம்நகர்வலம் வர உதவுவதுநாரதன் நாரதம்! தாள்மூட்டு வலிக்க. திரிலோகமும் திரிந்துகோள்மூட்டும்-ஒரு கலகப் பிரியன்-நாளும் ஓயாமல் சுற்றும்-இந்த உலகப் பிரியன்! இவன்கோள் மூட்டுவான் என்றுகோள்களே பயப்படும்; எனினும் இந்த ...