பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ வருணனை வளம் * 61 மாந்தர்களின் இந்த அழகோவியங்களைக் காணலாம். ஆண்டுக் கண்டு மகிழ்க (இயல்-3). ஈண்டும் சிலவற்றைப் பட்டு கத்திரித்த மாதிரி சுருக்கமாகக் காட்டுவோம். () சத்தியவதியைக் குறிப்பிடும்போது, அவள் பரதவர் குலத்துப் பாவை!-இந்தப் பூவில்-எந்தப் பூவிலும் இல்லாத வாசத்தை-தன் கேசத்தில்வைத்திருக்கும் பூவை! (1-பக்:32) (2) பிருதை (குந்தி)யைக் குறிப்பிடும்போது, - -அவளது கொப்பூழ்க் கொடியைக் கத்திரிக்கும் போதே வனப்பு மிக்கவள் என வையம் வழங்கிவிட்டது விருதை! அவள் அமாவாசை இல்லாதவெண்கதிர்; அத்தமனம் இல்லாதசெங்கதிர்; ஒர் ஆடவன் வந்துஅறுவடை செய்யாதுமண்கதிர்போல்-பருவம் முதிர்ந்து நிற்கும்-ஒரு பெண்கதிர்! (I-பக்:8485)