பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

கவிதையும் வாழ்க்கையும்


தொழிந்து விட்டது. ஒரு செல்வன் பத்தும் இருபதும் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரு பதிகத்தையோ, கலம்பகத்தையோ பெற்று வெளியிடுவானாயின், அந்த நூல் உலகில் வாழக் காரணம் உண்டோ? இப்பிற்கால இலக்கியங்களுள் பெரும்பாலன இந்த வகையைச் சேர்ந்தனவேதாம். இந்த வகை இலக்கியங்களைப்பற்றி இந்த அளவோடு நாமும் நிறுத்தி, இறுதியாக இன்றைய இலக்கியம் வாழ்வோடு பொருந்திய வகையினைக் கண்டு நூலினை முடிப்போம்.