இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறு பிரபந்தங்கள்
பாலாற்று கற்புனிலே பகர்வாயென் சுற்றமெலாம்
மேலாக யானிங்கே மேவினேன் - கோலநிறை
நல்லின்பங் கொள்வாய் நற்றாய் பயனளிப்பாள்
அல்லும் பகலும் அறிவன்யான் - நில்லாது
ஓடிப் புகன்றால் உடனே உனைச்சேர
நாடிஒரு சேயாற்று நங்கையவள் - கூடிடுவாள்
அன்னவளோ டுற்று அழியாத இன்பமுடன்
பொன்கதிரோன் றோன்று புகழ்க்கடலுள் - மன்னிநலம்
சேர்ந்தே கலந்து தெவிட்டாத இன்பமதில்
சார்ந்தே மகிழ்வாய் தழைத்து.*
* 1939ல் பாலாற்று வெள்ளப் பெருக்கின் நலம்கண்டு அன்னைக்குத் தூதாக அனுப்பிப் பாடியது.
33
3