பக்கம்:கவிதை உள்ளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு பிரபந்தங்கள்


பாலாற்று கற்புனிலே பகர்வாயென் சுற்றமெலாம்
மேலாக யானிங்கே மேவினேன் - கோலநிறை

நல்லின்பங் கொள்வாய் நற்றாய் பயனளிப்பாள்
அல்லும் பகலும் அறிவன்யான் - நில்லாது

ஓடிப் புகன்றால் உடனே உனைச்சேர
நாடிஒரு சேயாற்று நங்கையவள் - கூடிடுவாள்

அன்னவளோ டுற்று அழியாத இன்பமுடன்
பொன்கதிரோன் றோன்று புகழ்க்கடலுள் - மன்னிநலம்

சேர்ந்தே கலந்து தெவிட்டாத இன்பமதில்
சார்ந்தே மகிழ்வாய் தழைத்து.*

 

* 1939ல் பாலாற்று வெள்ளப் பெருக்கின் நலம்கண்டு அன்னைக்குத் தூதாக அனுப்பிப் பாடியது.

33

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/35&oldid=1389194" இலிருந்து மீள்விக்கப்பட்டது