பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பதினைந்து ஆண்டுகட்டு முன்பு ஆனந்தவிகடன் வார இதழ் தனது 3.11.1985 இதழுடன் ஓர் இலவச இணைப்பு இதழினை வெளியிட்டது. அது ஒரு வித்தியாசமான வெளியீடு. ஓர் உடையாடல்.... கவிதை பற்றி என்ற தலைப்புடன் வெளிவந்த அந்த இணைப்பு இதழ் விகடன் ஆசிரியரின் இலக்கிய ஆர்வத்தை மட்டுமின்றி தமிழ் மக்களின் தணியாத கவிதை ஆர்வத்தையும் அறிவிக்கும் வகையில் அமைந்தது எனலாம். அட்டையில் கவிஞர் மீரா கவிஞர்பாலா ஆகியோரின் புகைப்படங்கள். உள்ளே, இருவரின் கலந்துடையாடல். இப்படி ஒரு தனி இலக்கிய இணைப்பு வார இதழ் வரலாற்றில் ஒரு சாதனைதான். புகழ்மிக்க புதுக்கவிஞர் மீரா அவர்களும் திறனாய்வாளரும் கவிஞருமான பாலாவும் கவிஞர் இரா.வேலுசாமி விகடன் சார்பாக முன்னிலை வகிக்க உரையாடிய கருத்துக்களின் ஒரு தொகுப்பு அவ்வெளியீடு. சந்திப்புக்கு ஏற்பாடு விகடன். விகடன் சார்பாக ஏற்பாடு செய்தவர் மறைந்த கவிஞர் இரா.வேலுசாமி. கவிஞர் மீராஅவர்களின்சிவகெங்கை இல்லத்தில் அன்னம் அலுவலக மாடியில் ஒரு மணி